விசாகப் பூரணை – அனைத்து தானசாலைகளும் பதிவு செய்யப்படுவது கட்டாயம்

322 0

விசாகப் பூரணைக் காலத்தில் நடத்தப்படுகின்ற அனைத்து தானசாலைகளும், அந்தந்த பிரதேச உள்ளுராட்சி மன்றங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை பொது சுகதாதர பரிசோதகர்களின் சங்கம் இதனை அறிவித்துள்ளது.

இவ்வாறு பதிவு செய்துக் கொள்வதன் ஊடாகவே, தானசாலைகளில் வழங்கப்படுகின்ற உணவு பானங்களின் தரத்தை உறுதி செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்படுகின்ற அனைத்து தானசாலைகளின் ஏற்பாட்டாளர்களுக்கும், அலோசனைகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பதிவு செய்யப்படாத தானசாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.