மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

301 0

இலங்கை மத்திய வங்கியின் 2016 ஆண்டு அறிக்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியினால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இன்று (03) முற்பகல் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதோடு இந்த சந்தர்ப்பத்தில் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் கலாநிதி பீ.என்.வீரசிங்க, உதவி ஆளுநர் கே.எம்.எம். சிறிவர்தன, மத்திய வங்கியின் பொருளாதார ஆராச்சிப் பணிப்பாளர் கலாநிதி வை.இந்துரத்ன ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்