வெளிநாட்டு பணத்தை சிங்கப்பூர் கொண்டு செல்ல முற்பட்ட கண்டி அக்குறணை பகுதியை சேர்ந்த ஒருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 கோடி 39 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு பணத்தை சிங்கப்பூர் கொண்டு செல்ல முற்பட்ட வேளையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கம் தெரிவித்துள்ளது.