போதைப் பொருள் வர்த்தகரான சித்தீக் தொடர்ந்து விளக்கமறியலில்

218 0

பிரபல போதைப் பொருள் வர்த்தகரான மொஹமட் வசீம் மொஹமட் சித்தீக்கின் விளக்கமறியலை எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீடித்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் லால் ரணசிங்க பண்டார நேற்று உத்தரவிட்டார்.

பாகிஸ்தானில் கைதுசெய்யப்பட்ட சித்தீக் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கிணங்க ஆறுமாதங்கள் தடுப்பில் வைக்கப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

போதைப் பொருள் கடத்தியமை பணச்சலவை மற்றும் வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பொல விதானகே சமன் குமாரவுடன் தொடர்பு வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதுடன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

சந்தேகநபரின் விளக்கமறியலை இம்மாதம் 16ஆம் திகதி வரை நீடித்ததுடன், வழக்கு ஜூலை 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உத்தரவிட்டார்.