தெருவில் இருந்து கண்ணீர் வடிக்கவிட்டு நீங்கள் சந்தோசமாக இருப்பது தான் நல்லாட்சியா?

222 0
எங்களை தெருவில் இருந்து கண்ணீர் வடிக்கவிட்டு நீங்கள் சந்தோசமாக இருப்பது தான் ; நல்லாட்சியா? காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப்போராட்டம் 73 வது நாளாகவும் எதுவித தீர்வுகளும் இன்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் காணாமல் ஆக்கப்;பட்டவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எந்த வித பதிலையும் வழங்காது காலத்தை இழுத்தடித்;து வருகின்றது.
இது தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது நாங்கள் எங்கள் பிள்ளைகளை எங்கள் உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைத்தும் சரணடைந்தம் இன்று எட்டு வருடங்களாகிவிட்டன.
ஆராஜக ஆட்சியில் எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. நல்லாட்சியை ஏற்படுத்திய அரசாங்கம் தனது நூறு நாள்வேலைத்திட்டத்தில் எங்களது உறவுகள் தொடர்பான பிரச்சனைக்குரிய பதிலை வழங்குவதாகவும் தெரிவித்த நிலையில் நாங்களும் இணைந்து தான் நல்லாட்சியை ஆதரித்தோம். ஆனால் எங்களுக்;கான வாக்குறுதிகள் எதனையும் இந்த அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லை.
இன்று 73 வது நாட்களாக நாங்கள் வீதியில் கண்ணீருடன் இருந்து கொண்;டிருக்கின்றோம். எங்களது கோரிக்கையை யாரும் செவிசாய்த்து எங்கள் உறவுகள் தொடர்பில் எந்தப்பதிலையும் இதுவரை வழங்கவில்லை
இந்த நல்லாட்சி அரசாங்கம் நல்ல பதிலை தரவேண்டும் என்று நாங்கள் மான்றாட்டமாக கேட்கின்றோம். எங்களை தெருவில் இருந்து கண்ணீர் வடிக்கவிட்டு தாங்கள் சந்தோசமாக இருப்பது தான் நல்லாட்சியா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர்.