மியன்மார் அகதிகளை மிரிஹான தடுப்பு முகாமில் தங்க வைக்க உத்தரவு

280 0

யாழ்ப்பாணம் காங்கேசந்துறை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 30 மியன்மார் அகதிகளையும் மிரிஹான தடுப்பு முகாமில் தங்க வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி காலை காங்கேசன்துறை கடற்பகுதியில் வைத்து இரு இந்தியர்கள் உட்பட 30 மியன்மார் அகதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்த நிலையில் யாழ் பிரதான சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம்(2) குறித்த அகதிகளின் வழக்கு யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் 30 மியன்மார் அகதிகளையும் மிரிஹான தடுப்பு முகாமில் தங்க வைக்குமாறும், ஏனைய இரு இந்திய மீனவர்களான படகோட்டிகளையும் சட்டமா அதிபரின் அனுமதிபெறும் வரை தடுத்துவைக்குமாறும் மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.