பிக்குகள் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதே நல்லது

317 0

vengnanaratanaபௌத்த பிக்குகள் அரசியல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருப்பதே நலம் என்று, அஸ்கிரிய மஹாநாயக்கர் வரகாகொட சிறி ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் பிக்குகளை சில அரசியல்வாதிகள், அரசியலுக்குள் இழுத்து, சுயலாபம் அடைந்துள்ளனர்.

இதனால் மக்கள் அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர்.இந்த நிலையில் பிக்குகள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதே, பிக்குகளின் கௌரவத்தை மேலும் பாதுகாப்பதாக அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.