பல்கலைகழக பணியாளர்களின் போராட்டத்தினால் பாதிப்பு

318 0

University-strikeபல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக, நாட்டில் உள்ள பல பல்கலைக்கழகங்களின் நாளாந்த செயற்பாடுகள் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளன.பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.தேவன அதிகரிப்பு, நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

நேற்று இரண்டாம் தினமாகவும் முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்தினால் பல்கலைக்கழக கற்பித்தல் செயற்பாடுகள், நூலக சேவை என்பன பாதிக்கப்பட்டுள்ளன.தங்களின் கோரிக்கைகள் தீர்க்கப்படும்வரையில் இந்த போராட்டம் கைவிடப்பட மாட்டாது என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.