பிரேமதாசவின் நினைவுநாள்

220 0

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கொல்லப்பட்டு 24ஆவது ஆண்டு நினைவுநாள், இன்று அனுஷ்டிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினப் பேரணியில், ஆமர் வீதியில் சென்றுகொண்டிருந்த போது, 1993ஆம் ஆண்டு மே 1ஆம் திகதி கொல்லப்பட்டார்.   அவரது நினைவுநாளையொட்டிய சமய நிகழ்வொன்று, ஸ்ரீ சுச்சரித்த மண்டபத்தில், நேற்று இரவு இடம்பெற்ற அதேவேளை, இன்னொரு நிகழ்வு, ஹுணுபிட்டிய கங்காரம விகாரையில், இன்று இடம்பெறவுள்ளது.

விசேட நினைவு நிகழ்வொன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் பங்குபற்றலுடன், புதுக்கடையில் அடைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் சிலைக்கு அண்மையில் நடைபெறவுள்ளது –