மோ. சைக்­கிள் விபத்­தில் சிக்கி குடும்­பமே வைத்­தி­ய­சா­லை­யில்….

298 0
மாங்­கு­ளம் – ஒட்­டு­சுட்­டான் வீதி­யில் நேற்று இடம்­பெற்ற மோட்­டார் சைக்­கிள் விபத்­தில் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த மூவர் படு­கா­ய­ம­டைந்­த­னர். அவர்கள் மாஞ்­சோலை வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.
மன்­னா­ருக்­குச் சென்று முல்­லைத்­தீவு திரும்­பிய போதே அவர்­கள் பய­ணித்த மோட்­டார் சைக்­கிள் விபத்­துக்­குள்­ளாகி வெள்ள வாய்க்கா­லுக்­குள் தூக்கி வீசப்­பட்­ட­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
“முல்­லைத்­தீவு, முள்­ளிய­வ­ளை­யில் வசிக்­கும் குடும்­பத்­தி­னர் மன்­னா­ரில் உள்ள உற­வி­னர் வீட்­டுக்­குச் சென்று திரும்­பி­யுள்­ள­னர்.  மாங்­கு­ளம் – ஒட்­டு­சுட்­டான் வீதி­யில் 9ஆம் கட்­டைப் பகு­தி­யில் அவர்­கள் பய­ணித்த மோட்­டார்  வீதி­யோ­ரம் இருந்த பாது­காப்பு கல்­லில் மோதி விபத்­துக்­குள்­ளா­னது.
விபத்து இடம்­பெற்ற சம­யம் மோட்­டார் சைக்­கி­ளில் கண­வன், மனைவி மற்­றும் அவர்­க­ளது மகள் உள்­ளிட்ட  மூவர் பய­ணித்­துள்­ள­னர். விபத்­தில் தாயும் மக­ளும் வீதி­யோ­ரத்­தி­லி­ருந்த 8 அடி பள்­ளத்­துக்­குள் தூக்கி வீசப்பட்­ட­னர்.
கணவன் மயக்­க­ம­டைந்­தார். விபத்­துக்­குள்­ளான மூவ­ரும் மாஞ்­சோலை வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர். மேல­திக விசா­ர­ணை­கள்  முன்­னெ­டுக்­கப் ப­டு­கின்­றன” என்று ஒட்­டு­சுட்­டான் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.