நீதிமன்ற உத்தரவினை மீறி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது

296 0

b4f8aa0e64f234ba028215bbcd334cb6_XLநீதிமன்ற உத்தரவினை மீறி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது என காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கையின் மூலம் இது பற்றி அறிவித்தல் விடுத்துள்ளார்.

பல்வேறு தரப்பினர் பாத யாத்திரை, கட்சி மேம்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த செயற்பாடுகளுக்கு தடை விதித்து கண்டி மற்றும் மாவனல்ல நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன.

இந்த உத்தரவினை பின்பற்றத் தவறும் தரப்பினர் தராதரம் பாராது தண்டிக்கப்படுவர் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாத யாத்திரை மற்றும் ஏனைய அரசியல் செயற்பாடுகளினால் கலகம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக காவல்துறை மா அதிபர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.