பாத யாத்திரை மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது – ராஜித சேனாரட்ன

298 0

a86f81678f657ec34261292f611d3c0b_XLபாத யாத்திரைகளின் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என அமைச்சரவை பேச்சாளர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சி என தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் சிறு குழுவினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பதவியில் அமர்த்த முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் தரப்பினர் பாத யாத்திரை ஒன்றை எவ்வாறு நடத்துவது என்பது கூட தெரியாமல் இருக்கின்றார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாத யாத்திரை நடத்தப்பட வேண்டுமாயின் கூட்டங்களை நடாத்தவும் ஏனைய தேவைகளுக்கும் முன்கூட்டியே மைதான ஒதுக்கீட்டை மேற்கொண்டிருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாமும் இரண்டு பிரதான கட்சிகளின் சார்பிலும் பாத யாத்திரைகளில் பங்கேற்றிருந்த போதிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் பாத யாத்திரை செய்வது உடல் நலனை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.