இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை விடுவிக்க வேண்டுமாயின் மீனவச் சங்கங்களின் விருப்பம் அத்தியாவசியம்!

209 0

சிறீலங்கா பாதுகாப்புத் தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள, இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை விடுவிக்க வேண்டுமாயின், அதற்கு வடமாகாண மீனவச் சங்கங்களின் விருப்பம் அத்தியாவசியமானதென, மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

‘இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான பல நடவடிக்கைகளை, இந்திய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக, இந்தியப் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. எவ்வாறாயனும், இது தொடர்பில், இலங்கை மீனவச் சங்கங்களின் ஒத்துழைப்பு இருப்பதாயின் மாத்திரமே படகுகள் விடுவிக்கப்படும்’ என்று, அமைச்சர் மேலும் கூறினார்.