தொடரூந்து மிதிப்பலகையில் பயணித்தபோது விபத்து – ஒருவர் பலி

209 0

தொடரூந்து மிதிப்பலகையில் பயணித்தபோது, தொடரூந்து தண்டவாளத்துக்கு அருகில் நிருத்தப்பட்டிருந்த பார ஊர்தியில் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் மொரட்டுவை – கொரலவெல்ல பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

சம்பவத்தில் காயமடைந்துள்ள மேலும் நான்கு பேர் பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் 10 பேர் வரையில் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.