மொரட்டுவையில் புகையிரத மிதிபலகையில் பயணித்த சிலர் பாரவூர்தியில் மோதி விபத்து!9 பேர் காயம்

292 0

மொரடுவை , கொரலவெல்ல பிரதேசத்தில் புகையிரதத்தில் பயணித்த சிலர் புகையிரத வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியொன்றில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இதில்  9 பேர் காயமடைந்துள்ள நிலையில் , அதில ்இருவரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் புகையிரதத்தின் மிதிபலகையில் தொங்கிக் கொண்டு பயணித்துள்ள நிலையில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது