மஹிந்த பேரணி கண்டி நகருக்கு வெளியில்

316 0

mano-ganesan_01மஹிந்த அணியினரால் நடத்தப்படவுள்ள பேரணி இன்று கண்டி நகர எல்லைக்கு வெளியில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக கண்டி நகரில் இந்த பேரணி ஆரம்பிக்கப்படவிருந்த போதும், நீதிமன்றம் இதற்கு தடை விதித்தது.

இதன்படி கண்டி நகர எல்லைக்கு வெளியில் இருந்து இதனை ஆரம்பிக்கவிருப்பதாக, மஹிந்த அணியினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமை விரிவாக்கல் வேலைத்திட்டமும் கண்டியில் நடைபெறவுள்ளது.

இதனையும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, இன்று பேரணி நடத்துகின்றன மஹிந்த அணியினர் முன்வைக்கின்ற கேள்விகளை, பொது மக்கள் மீண்டும் அவர்களிடமே முன்வைக்க வேண்டும் என்று அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

உள்ளுராட்சி தேர்தல் பிற்போடப்பட்டமை தொடர்பில் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஆனால் இந்த தேர்தல் பிற்போடப்படுவதற்கு அவர்களே காரணமாக இருந்துள்ளார்கள்.

இவ்வாறு அவர்கள் முன்வைக்கின்ற பல்வேறு கேள்விகளுக்கும், அவர்களே காரணமாக இருக்கின்றனர்.

எனவே பொது மக்கள் அவர்களிடமே இந்த கேள்விகளை திருப்பிக் கேட்க வேண்டும் என்று மனோகணேசன் தெரிவித்துள்ளார்.