சிரியாவில் குண்டுத் தாக்குதல்

307 0

42வட-கிழக்கு சிரியாவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் குறைந்த பட்சம் 44 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குர்திஸ் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காமிஷ்லி நகரில் இந்ததாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உழவு வண்டி ஒன்றில் வெடி பொருட்கள் நிரப்பப்பட்டு, குர்திஸ் படையினரின் பாதுகாப்பு தளம் ஒன்றுக்கு அருகில் வெடிக்கச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் இதனைத் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலை நடத்தியது தாங்களே என்று, ஐ.எஸ். தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்.

இதற்கு முன்னரும் இந்த பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் குர்திஸ் படையினருக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.