போராட்ட வடிவங்களை மாற்றி போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

262 0
இதுவரை எங்கள் போராட்டத்திற்கு எந்தவிதமான பதிலையும் வழங்காத அரசாங்கத்திற்கு கடும் அழுத்தங்களைக் கொடுக்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்க இருப்பதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்புப்போராட்டம் இன்று 66வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது,
இறுதியுத்தத்தின் போதும் அதற்குமுன்னரும் படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான உரிய பதிலை இந்த அரசு வழங்கவேண்டுமெனக்கோரி மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்புப்போராட்டம் அரசாங்கத்தின் எந்தவிதபதில்களுமின்றி  இன்று 66வது நாளாகவும் தொடர்கின்றது.
இந்நிலையில் நாளை வியாழக்கிழமை குறித்த போராட்டங்களுக்கு வலிச்சேர்க்கும் வகையில் பூரண கதவடைப்பு அழைப்பு விடுக்கப்பட்;டுள்ள நிலையில் இதற்கு பல்வேறு
தரப்புக்களும் தமது ஆதரவுகளை வழங்கியுள்ளன.
நாளைய தினம் இவ்வாறு கதவடைப்புப்போராட்டத்தைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் நெருக்குதல்களை கொடுக்கும் வகையில் எங்களுடைய போராட்ட வடிவங்களை மாற்றி போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என இப்போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.