இந்தியாவில் பயிற்சிபெற்று வந்த இலங்கை கடற்படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு

306 0

இந்தியாவில் பயிற்சிபெற்று வந்த இலங்கை கடற்படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கேரளாவின் – எர்னாகுளம் கடற்படைதளத்தில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் 39 வயதான வை.பி.என்.ஆர்.வீரசிங்க எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீச்சல் பயிற்சியின் போது அவர் காணாமல் போனதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 3ஆம் திகதி முதல் அவர் அங்கு பயிற்சி பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இலங்கைக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை மேற்கொள்வதாகவும், இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த கடற்படை சிப்பாயின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.