தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து நடாத்தும் தொழிலாளர் தின பேரணி

438 0

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து நடாத்தும் தொழிலாளர் தின பேரணியும் பொதுக்கூட்டமும் சாவகச்சேரியில் இடம்பெறவுள்ளது.

காலம்: 01 வைகாசி 2017 (திங்கட்கிழமை)
நேரம்: பி.ப 3.00 மணிக்கு பேரணி ஆரம்பம்.
இடம்: சந்திரசேகர வாரிவனநாத சிவன்கோவில் முன்றல் ( புகையிரத நிலைய அருகாமை)

தலைமை: திரு யோகேஸ்வரன் ஜெயக்குமார்

(சாவகச்சேரி தொகுதி அமைப்பாளர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)

(யாழ் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற உதவிப் பதிவாளர்)

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை

காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிதலை வலியுறுத்தல்

தமிழ்த் தொழிலாளர்கள், தமிழ் விவசாயிகள்,
தமிழ் மீனவர்கள் மீதான ஒடுக்குமுறையிலிருந்து விடுபடல்,
காணி அபகரிப்பை தடுத்தல்,
மீள் குடியேற்றத்தை வலியுறுத்துதல்,
இராணுவ மயமாக்கலை தடுத்தல்,
கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வலியுறுத்தல்,
வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தல்,
இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இனவழிப்பு, போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை வலியுறுத்தல்,

தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ்த் தேசத்தின் அங்கீகாரம் அங்கீகாரத்தை வலியுறுத்தல்
ஆகிய கோரிக்கைகளுக்கு வலுச் சேர்க்க அனைவரையும் அணிதிரளுமாறு அன்புடன் அழைக்கின்றனர்.

தொழிலாள்தினம் 2017 ஏற்பாட்டுக்குழு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்