மலேரியா ஒழிக்கப்பட்ட இலங்கையில் மீண்டும் மலேரியா பரவும் அபாயம்

315 0

இலங்கையில் மலேரியா நோய் முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளபோதும், வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்களால் அந்த நோய் பரவும் அச்சுறுத்தல் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்று உலக மலேரியா தினத்தை முன்னிட்டு, மலேரிய நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் இந்த எச்சரிக்கையுடன் கூடிய தகவலை வெளியிட்டுள்ளார்.

எனவே, இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள், மலேரியா தொற்றுக்கு உள்ளானவர்களா என்பதைக் கண்டறிய, கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள சுகாதார மருத்துவ காரியாலயம் ஊடாக, சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.