அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இந்த மாத இறுதியில் இந்தியா செல்லவுள்ளார் – ஜே.வி.பி கூறுகின்றது.

221 0

திருகோணமலை எண்ணெய் கிடங்குகளை இந்தியாவுடன் இணைந்து நிர்வகிப்பது குறித்து உடன்படிக்கையை இறுதி செய்வதற்காக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இந்த மாத இறுதியில் இந்தியா செல்லவுள்ளதாக ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை எண்ணெய் கிடங்குகளை இயக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஜே.வி.பி. எதிர்ப்பு வெளியிடுவதாக அவர் கூறியுள்ளார்.

நாட்டின் சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கும் வகையிலேயே அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அநுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.