அரசாங்கத்தையும் கட்சியையும் பலப்படுத்த மே மாதம் ஜனாதிபதி முக்கிய தீர்மானம்

211 0

அரசாங்கத்தையும் கட்சியையும் பலப்படுத்துவதற்காக மே மாதம் ஜனாதிபதி முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கண்டியில் இடம்பெறவுள்ள மே தினம் கூட்டத்தில் பங்கேற்குமாறு, கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

மே தினக் கூட்டத்தில் பங்கேறங்காதவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கதற்கு கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீ;மானிக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.