கனடாவில் கொலை – இலங்கையரது வழக்கு அடுத்த வாரம் நிறைவு

206 0

கனடாவில் கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையர் ஒருவரது வழக்கு அடுத்த வாரம் நிறைவுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் சீ.ரீ.வி.நியுஸ் என்ற இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அமலன் தண்டபானி தேசிகர் என்று குறித்த இலங்கையர், மற்றுமொரு இலங்கையரான ஜெயராசன் மாணிக்கராஜா என்பவரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் அமலன் இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறார்.

தமது மனைவியிடம் அவமரியாதையாக நடந்து கொண்டமைக்காக, ஜெயராசன் மாணிக்கராஜாவை பல தடவைகள் எச்சரித்துள்ள போதும், தாம் அவரை கொலை செய்யவில்லை என்று நேற்றைய வழக்கு விசாரணையின் போது அவர் வாதித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு ஜுன் 23ஆம் திகதி இந்த கொலை இடம்பெற்றது.

இது குறித்த இரசாயன பகுப்பாய்வு அறிக்கை முன்வைக்கப்படவுள்ளதுடன், அமலனின் மனைவியிடம் சாட்சி பதிவும் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகள் நிறைவடைந்தப் பின்னர், வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் வெளியிடப்படலாம் என்று கனேடிய ஊடகம் தெரிவித்துள்ளது.