இலங்கை மீனவர்கள் கையளிப்பு

227 0

தமிழ்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் இன்றைய தினம் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கடந்த 4ஆம் திகதி அவர்கள் தூத்துக்குடி கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு, ராமநாதபுரம் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டனர்.

பின்னர் தமிழக அரசாங்கத்தின் பரிந்துரை அடிப்படையில் அவர்களும் அவர்களின் படகுகளும் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி இன்று சர்வதேச கடற்பரப்பில் வைத்து அவர்கள் இலங்கை கடற்படையினரிடம் இந்திய கடலோர பாதுகாப்பு அதிகாரிகளால் கையளிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.