ஆசிய- பசுபிக் வலய இளம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிராந்திய கூட்டம் இலங்கையில் இடம்பெறவுள்ளது.
அனைத்துப் பாராளுமன்றங்களினதும் ஒன்றியம், இலங்கை பாராளுமன்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் ஆகிய இணைந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வின் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, அனைத்துப் பாராளுமன்றங்களினதும் ஒன்றிய தலைவர் சபர் சவுத்ரி மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்ட இலங்கை வதிவிடப் பிரதிநிதி உனா மேக் கவ்லே ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

