மாணவனை அச்சுறுத்திய கல்லூரி அதிபருக்கு பிணை

304 0

judgegavelgenericகொழும்பு நாலந்த கல்லூரியின் அதிபருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று குறித்த வழங்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில், அதிபர் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

மாணவர் ஒருவரை அவதூறாக பேசியதுடன் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறி, கல்லூரியின் அதிபர் ஜே .எச் எம் வசந்த ரஞ்சித்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

நாலந்த கல்லூரியில் பயிலும் மாணவன் ஒருவரின் தந்தையால், பொறல்ல காவல்நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அதிபர் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணையே இன்று இடம்பெற்றது.