மஹிந்த அணிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் நீதிமன்றம் தடையுத்தரவு

388 0

law-court_2900691bநாளை கண்டியில் இருந்து ஆரம்பிக்கவிருந்த மஹிந்த அணியின் பாதையாத்திரை மற்றும் கண்டியில் இடம்பெறவிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் மேம்பாட்டு திட்டம் ஆகியவை தொடர்பில், கண்டி நீதவான் நீதிமன்றம் இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இதன்படி, மஹிந்த சார்பு அணியினரின் பேரணியை கண்டி நகருக்கு வெளியில் இருந்து ஆரம்பிக்கவும், ஐக்கிய தேசிய கட்சியின் மேம்பாட்டு திட்டத்தை பிற்பகல் 2 மணிக்கு பின்னர் நடத்தவும் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

காவல்துறையினரின் கோரிக்கைக்கு இணங்கவே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே மஹிந்த அணியினரி;ன் பேரணி, மாவனல்ல நகருக்கும் பிரவேசிக்க மாவனல்ல நீதிவான் நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.