பெற்றோலிய வள தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

221 0

இலங்கை பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஏழு நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன.

திருகோணமலை துறைமுகத்திலுள்ள எரிபொருள் தாங்கியை இந்தியாவுக்கு வழங்க எதிர்ப்புத் தெரிவித்தல் உட்பட மூன்று கோரிக்கைகளை முன்னிருத்தி, இந்த நடவடிக்கையை இவர்கள் மேற்கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுவரை தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உரிய பதிலளிக்கவில்லை என, பெற்றோலிய வள தொழிற்சங்க ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் பந்துல சமன் குமார சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் குறித்து அமைச்சர் சந்திம வீரக்கொடியிடம் அத தெரண வினவிய போது, நாளை காலை 09.00 மணிக்கு தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, கூறியுள்ளார்.