ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட அமைப்பாளர்கள் ஏழுபேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக்கடிதங்களை ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் வைத்து கையேற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்தவகையில்,
01. கொழும்பு மாவட்டத்துக்கான அமைப்பாளராக – சுமுது விஜேவர்தன
02. குருணாகலை மாவட்ட அமைப்பாளராக – ஆர்.எம்.சனத் பத்மசிறி மற்றும் ஏ.ஏ.ஏ. லதீப்
03. திருகோணமலை மாவட்டம் – கே.பீ. பிரியந்த பிரேமகுமார
04. பதுளை மாவட்டம் – ரசிக தேசப்பிரிய ரத்னாநயக்க
05. மட்டக்களப்பு மாவட்டம் – எம்.எஸ். சுபைர்
06. யாழ்ப்பாண மாவட்டம் – எஸ். கஜன்
ஆகியோர் ஸ்ரீ ல.சு.க.யின் மாவட்ட அமைப்பாளர்களாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.