புதிய அரசியலமைப்புக்காக சகல கட்சிகளுடன் பேச அரசாங்கம் தீர்மானம்

217 0

புதிய அரசியலமைப்பை அமைக்கும் நடவடிக்கையை சாத்தியமாக்குவதற்காக, சகல எதிர்க் கட்சிகளுடனும் கலந்துரையாடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

புதிய அரசியலமைப்பை தயாரிப்பதில் எதிர்க் கட்சியினர் பல்வேறு விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருவதாகவும், இதனால் புதிய அரசியலமைப்புப் பணியை முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும் அரசியலமைப்பு செயற்குழு உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் ஆகியோரிடையே அடுத்துவரும் நாட்களில் கலந்துரையாடவுள்ளதாகவும், இதனையடுத்து, கூட்டு எதிர்க் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.