நள்ளிரவு முதல் போராட்டம் – கனியவள தொழில் சங்கங்களின் ஒன்றியம்

218 0

பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் தொழில் சங்க போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக கனியவள தொழில் சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளன.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஒன்றியத்தின் இணைப்பாளர் டீ.ஜே. ராஜகருணா இதனை தெரிவித்தார்.

திருகோணமலை எண்ணெய் குதத்தை இந்தியாவிற்கு வழங்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழில் சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.