வருட இறுதிக்குள் எட்கா ஒப்பந்தம் கைச்சாத்தாகும் – பிரதமர் ரணில்

223 0

இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பினை வலுப்படுத்தும் அதேவேளை, திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பிலும், இந்திய தரப்புடன் கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பிரதமர் ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை மறுதினம் இந்தியா செல்லவுள்ளார்.

இந்த விஜயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இந்த வருட இறுதிக்குள் எட்கா ஒப்பந்தத்தை இந்தியாவுடன் மேற்கொள்ளப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் புதன் கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறுவுகள் குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.