18 மலேரிய தொற்றாளர்கள் இலங்கையில்

309 0

இந்த வருடத்தின் முதல் நான்கு மாத காலப்பகுதியினில், வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்த, 18 மலேரியா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேரியா தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளார்.

ஆபிரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வந்த சுற்றுலாப்பயணிகள் இடையே இவ்வாறான தொற்றாளர்கள் காணப்பட்டதாக அந்த பிரிவின் பணிப்பாளர் எச்.டி.வி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாளை மறுதினம் சர்வதேச மலேரியா தினம் அணுஷ்டிக்கப்படும் நிலையில், அதையொட்டியதனான தெளிவு படுத்தல் மற்றும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.