அரசாங்கத்துடன் எந்த உடன்படிக்கையும் செய்துக்கொள்ளப்பட வில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தெல்கொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மே தின நிகழ்வுக்காக காலிமுகத்திடல் மஹிந்த அணியினருக்கு வழங்கப்பட்டமையானது, மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் என தெரிவிக்கப்படுகின்றமை உண்மைக்கு புறப்பானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.