ஆசிய பசுபிக் வலய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு

204 0

ஆசிய பசுபிக் வலய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களின் வலய சந்திப்பு எதிர்வரும் 25 மற்றும் 26ம் திகதிகளில் கொழும்பில் இடம்பெற உள்ளது.

இலங்கை பாராளுமன்ம், சர்வதேச பாராளுமன்ற சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்ட பிரிவு ஆகியன இணைந்து இதனை ஒழுங்கு செய்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது.

´அனைத்து தரப்பினரையும் இணைத்து அமைதியான சமூகத்தை ஊக்குவித்து, வன்முறை தீவிரவாதத்தை தடுக்கும் செயற்பாட்டில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கு´ என்ற தலைப்பில் இது இடம்பெற உள்ளது.

இந்த சந்திப்பில் ஆசிய பசுபிக் வலயத்தில் உள்ள 39 நாடுகளின் தேசிய பாராளுமன்றங்களின் இளம் உறுப்பினர்கள், தெரிவு செய்யப்பட்ட இளைஞர் அமைப்புக்கள், கங்கங்களின் கண்காணிப்பாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜேவிபி, தமிழரசுக் கட்சி ஆகிய கட்சிகளின் 20 இளம் உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளதாக அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது.