வடக்கு மாணவர்களுக்கு துருக்கி உதவி

294 0

வட மாகாணத்தில் பின்தங்கிய நிலையில் காணப்படும் மாணவர்களுக்கான உதவிகளை வழங்க துருக்கி அரசாங்கம் முன்வந்துள்ளது.

அந்த வகையில் 3000 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்று யாழ் வேலணை மத்திய கல்லூரியில், நடைபெற்றது.

இதற்கு பிரதம அதிதியாக சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் மற்றும் துருக்கியின் இலங்கைக்கான தூதுவர் ருனியா ஹாடார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்காக 90 மில்லியன் ரூபாவினை துருக்கி அரசாங்கம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் வட மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.ரவீந்திரன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.