SAITM தொடர்பான அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை

219 0

மாலபே சய்டம் நிறுவனம் தொடர்பில் அரசின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களும் இல்லை என்று உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

மாலபே சய்டம் நிறுவனம் தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி வழங்கிய தீர்மானங்களை அதே அடிப்படையில் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசியல் தேவைகளுக்காக அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு எதிர்ப்பு வௌியிடுவதாக அமைச்சர் கூறினார்.

கண்டி பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட போதே உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்தார்.