கேரளா கஞ்சா விநியோகம் செய்தவர் கைது

191 0

ஒரு தொகை கேரளா கஞ்சாவை விநியோகம் செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் வத்தளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடமிருந்து ஒரு கிலோவும் 810 கிராம் கேரளா கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் பண்டாரவளை பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதுடன், அவர் இன்றையதினம் வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.