சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புகளுடன், நாட்டை கட்டியெழுப்பும் இறுதி சந்தர்ப்பத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
மருதனையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் செய்தியுடன் இந்தியா சென்று எதிர்வரும் புதன் கிழமை இந்திய பிரதமரை சந்திக்க உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
மே மாதம் சீனா சென்று சீன ஜனாதிபதியுடன் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடப்படும்.
சிங்கபூருடனும் நாங்கள் கலந்துரையாடவுள்ளோம், ஜனாதிபதி, மலேசியா, இந்தோனேசியா சென்றுள்ளார்.
அந்த வகையில், இந்த நாடுகளை இணைத்துக் கொண்டு அபிவிருத்தி பயணத்தை மேற்கொள்ள உள்ளோம்.
நாட்டை கட்டியெழுப்ப கிடைத்துள்ள இறுதி சந்தர்ப்பம் இதுவே. இதனை இந்த அரசாங்கம் முழுமையாக பயன்படுத்திச் கொள்ளும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.