இங்கிலாந்தில் அகதி அந்தஸ்து கோரிய இலங்கைத் தமிழரது விண்ணப்பம் நிராகரிப்பு

225 0

இலங்கையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறி இங்கிலாந்தில் அகதி அந்தஸ்து கோரிய இலங்கைத் தமிழரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒன்று இந்த மனுவை நிராகரித்துள்ளது.

இலங்கை பாதுகாப்பு தரப்புக்களால் தாம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக குறித்த இலங்கையர் தமது விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதற்கு அவர் தமது உடலில் உள்ள தீக்காயங்களை காண்பித்துள்ளார்.

இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் குறித்த இலங்கையரின் விருப்பத்துடன் காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய குறித்த இலங்கை தமிழரின், அகதி அந்தஸ்த்து கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.