ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளில் முன்னேற்றம், இலங்கையர்களுக்கு நன்மையாக அமையும் – ஜேம்ஸ் டோரிஸ்

226 0

இலங்கையில் ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படுவது இலங்கையர்களுக்கும் இலங்கையின் வியாபாரத் விருத்திக்கும் நன்மையாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே பிரித்தானிய இலங்கையின் ஊழல் ஒழிப்பு முயற்சிகளுக்கு உதவிகளை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளால் ஏற்படும் நம்பகத் தன்மையின் மூலம் இலங்கையில் முதலீட்டு முயற்சிகளால் வர்த்தகத் துறையில் அபிவிருத்தி ஏற்படும் என அவர் கலந்துகொண்ட விசேட நிகழ்வொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெறும் நிதி சார்ந்த மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு தமது அனுபவங்களை பகிர்துகொள்ள தயாராகவுள்ளதாகவும் ஜேம்ஸ் டோரிஸ் குறிப்பிட்டுள்ளார்.