சமூகத்தில் காணப்படும் அனைத்து மோசடிகளும் காவல்துறைக்குள்ளும் இடம்பெறுகிறது – காவல்துறைமா அதிபர்

208 0

சமூகத்தில் காணப்படும் அனைத்து மோசடிகளும் காவல்துறைக்குள்ளும் இடம்பெறுவதாக காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மக்களின் வரிப் பணத்தில் ஊதியம் பெரும் காவல்துறையினர், மக்களுக்கு சேவையாற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

காவல்துறையினர் காக்கிச் சட்டை அணிந்தாலும், அவர்களின் இரத்தத்தில் உள்ளதையும், உடலில் உள்ளதையும் மாற்ற முடியாதுள்ளது.

இதுவே கசப்பான உண்மை என காவல்துறைமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.