இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பழுதடைந்த படகுகளுக்கு தமிழக முதலமைச்சர் நட்டஈடு

207 0

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், திருத்த முடியாத அளவுக்கு பழுதடைந்திருந்த தமிழக மீனவர்களின் படகுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி நட்டஈடு வழங்கியுள்ளார்.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக மீனவர்களின் 64 படகுகள் சில வருடங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டன.

குறித்த படகுகளில் 18 படகுகள் திருத்த முடியாத அளவுக்கு பழுதடைந்திருந்தன.

அந்த படகுகளுக்கு தமிழக அரசாங்கம் நட்ட ஈடு வழங்கியுள்ளது.

இதற்கமைய, படகொன்றுக்கு 5 லட்சம் ரூபா வீதம், 90 லட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்பட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.