ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கரோலினா தோட்டப்பகுதிக்கு அண்மித்த பகுதியில் சிறுத்தை குட்டியொன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சிறுத்தை குட்டி, வாகனம் மோதி இறந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
காட்டுத் தீ, வறட்சி காரணமாக காடுகளில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், உணவுக்காக காட்டு விலங்குகள் பெருந்தோட்ட பகுதிகளில் குப்பை கூழங்களை நாடி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மலையகத்தின் பெருந்தோட்டப்பகுதிக்குள் அண்மைக்காலமாக காட்டு விலங்குகள் உலாவும் நிலை தொடர்ந்து வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தைகள், காட்டு பன்றிகள் என பல மிருகங்கள் பிரதான வீதியை தாண்டி பெருந்தோட்டப்பகுதிகளுக்கு வருவதால் வாகனங்களில் மோதுண்டு உயிரிழப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது