மட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவையின் இரண்டாவது மாதாந்த கூட்டத்தின் செயலமர்வு(காணொளி)

298 0

இலங்கை சமாதான பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவையின் இரண்டாவது மாதாந்த கூட்டம், பன்மைத்துவ வாத சமூகத்தை கட்டியெழுப்புதல் எனும் தலைப்பில் ஒரு நாள் செயலமர்வாக நடைபெற்றது.

தேசிய சமாதான பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஆர்.மனோகரன் தலைமையில் மட்டக்களப்பு விடுதி ஒன்றில் இச் செயலமர்வு நடைபெற்றது.

ஒரு சமூகத்தில் பல்வேறுபட்ட தரங்கள், மதங்கள், வர்க்கங்களுக்குள் உள்வாங்கப்பட்டு மக்கள் வெவ்வேறு பிரிவினராக பிரிந்து வாழ்கின்ற நிலையில், தங்களுக்குரிய சம்பிரதாயங்களை பின்பற்றவும், அவர்களது கலாசார முறைக்கேற்ப செயல்படுத்துவதற்கான வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கும், சட்ட ரீதியாக அங்கீகாரம் வழங்கப்படுகின்ற நிலைகள் தொடர்பாக செயலமர்வில் கலந்துரையாடப்பட்டது.