தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் லிந்துலை மருத்துவமனையில்……….(காணொளி)

229 0

 

தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த தொழிலாளர்கள் மீது இன்று காலை குளவிகள் கொட்டியதால் பாதிக்கப்பட்ட 11 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11 பேரும் பெண் தொழிலாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேரும் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.