அனுமதிப்பத்திரம் கிடைக்காதோர் முறையிடலாம்

326 0

Examinations Commissioner General W.  M. N. J. Pushpakumarஐந்தாம் தர புல­மை­ப்ப­ரிசில் பரீட்சை எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை நாட­ளா­விய ரீதியில் இடம்­பெ­ற­வுள்­ளது.

குறித்த பரீட்­சைக்­கான அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் கடந்த 18 ஆம் திகதி நாட­ளா­விய ரீதியில் உள்ள சகல பாட­சா­லை­க­ளுக்கும் தபால் மூலம் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக பரீட்­சைகள் திணைக்­கள ஆணை­யாளர் நாயகம் டப்­ளியூ.எம்.என்.ஜே.புஷ்­ப­கு­மார தெரி­வித்­துள்ளார்.

அனு­மதிப் பத்­தி­ரங்கள் கிடைக்­க­ப்பெ­றாத பரீட்­சார்த்­தி­களும், கிடைக்­கப்­பெற்ற அனு­மதி பத்­தி­ரங்­களில் ஏதேனும் பிழை இருப்பின் அது தொடர்பில் உட­ன­டி­யாக இம்­மாதம் 29 ஆம் திக­திக்கு முன்னர் பாட­சாலை அதிபர்களினூடாக தெரியப்படுத்துமாறும் அவர் குறிப் பிட்டுள்ளார்.