தராதரம் பார்க்காமல் கைது செய்ய வேண்டும் : பொலிஸ்மா அதிபர் உத்தரவு!

240 0

குப்பை அகற்றல் நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவோரை கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ்மா அதிபர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுவோரை தராதரம் பார்க்காது கைது செய்யுமாறும் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.கொழும்பு ஊடகமொன்றிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொம்பே, ஜாஎல, சுதுவெல்ல, ரத்மலானை, கரதியான போன்ற இடங்களில் குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.