வட்டவளை தீயினால் 25 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

212 0

வட்டவளை ரொசல்ல வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் சுமார் 25 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளது.

வட்டவளை பிரதேசத்திற்கு நீர்வழங்கும் பிரதான ரொசல்ல வனப்பகுதியில் நேற்று (21) மாலை 5 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டது.

நேற்று இரவு வரை வட்டவளை பொலிஸார் மற்றும் பிரதேச மக்களும் இணைந்து தீயை கட்டுபடுத்த முற்றபட்ட போதிலும் தீயை அணைக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இனம் தெரியாதவர்களினால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கிறனர்

மலை உச்சியில் ஆரம்பித்த தீப்பரவல் வட்டவளை பிரதான வீதிவரை பரவியுள்ள நிலையில் 25 ஏக்கர் வரையான காட்டுப்பகுதி எரிந்து நாசமாகீயுள்ளது.